Wednesday, 7 March 2018

பனி விழி திறந்து

பனி விழி திறந்து-புல்
நுனி முடி சூடும்
நனி நீள் காலை
இனிமையும் நீயும்
என்னுடன் கலந்து
தனிமை போக்கும்

வானம் சிவக்கும்
வண்ணம் சூடும்
புதிய பொழுதாய் நீ
Image may contain: 1 person, smiling, text கானம் பாடுவேன்
கவிதை சொல்லுவேன்
எல்லாம் உன்னால்
இந்த ஓவியம் தமிழ் நாட்டின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவரான தோழர் ஜீவா வரைந்தது கோடி முறை நன்றி சொல்வேன்

No comments: