Wednesday, 7 March 2018

மார்கழி இது எனக்கு தவக்காலம்

மார்கழி
இது எனக்கு தவக்காலம்
உன் நினைவுகளால்
நிறையும் பொழுதுகள்
என் மார்கழி மகள்

மழையயை நேசிப்பாய்
மழையாடி மகிழ்வாய்
விளையாடும் உன் அழகு -என்
விழியோடு கனவாக

காலப் பெருவெளி

காலப் பெருவெளி
காற்று வெளியிடை உன் குரல்
கனவில் கேட்குதடி
நேற்று தெறித்த உன் முகம்
நிலவில் தோயுதடி

சொல்லிச் சென்ற கவிதையெல்லாம்
எனக்கு சூத்திரமானதடி
எல்லைகள் கடந்த காலப் பெருவெளி
நிந்தன் நினைவினில் காயுதடி

குளிரால் உலரும் விடி காலை

குளிரால் உலரும் விடி காலை
குளிரால் உலரும்
விடி காலை
உன் நினைவால் உருகும்
மனம் நாளும்

பனி படரும்
இந்தப் பொழுதில்
நனி கூரும்
உன் கனி முகம்
நுனிப் புல்லின்
பனித் துளி
உன் முகம் காட்டி
மகிழ் கூரும்

உன் கனவுச் சுமை

உன் கனவுச் சுமை
கார்த்திகை முழு நிலவு
என் வாசல் வரை வந்து
உன் நினைவை
என்னுள் நீளச் சொல்கிறது

கார்த்திகை விளக்கீடு
நம் வீதியெங்கும்
வென்ணிலவுக்கு முகம் காட்டும் நேரம்
நாம் நம் வீட்டுப் படிகளில்
உட்காந்து கதைகள்
பல பேசி களித்த நாட்கள்
என்
மடி கனக்கிறது
உன் கனவுச் சுமை தேடி

இன்பப் பெரு வெளி

இன்பப் பெரு வெளி
உன்னை நினைத்து
ஓராயிரம் கவி சொல்வேன்
என்னில் உதித்த
இன்பப் பெரு வெளி
நீ

உன் சொல்லில் தெறித்த
அன்பின் திவலைகள்
எப்போதும்
இன்பப் பெரு வெளியாய்

நினைவுச் சுழி

நினைவுச் சுழி
மேலைப் புலத்திடையே
அதிகாலைக் குளிரிடையே
சாலை வழியிடையே
நீள நடக்கிறேன் நான் -உன்
நினைவுச் சுழியிடையே

ஒவ்வொரு நாளும்
என் கைகள் பற்றி
அழைத்துச் செல்கிறாய்
அச்சமில்லா பொழுதுகளை
எனக்கு தருகிறாய்

உன் ஒற்றைச் சிரிப்பு

உன் ஒற்றைச் சிரிப்பு
உன்
ஒற்றைச் சிரிப்பில்
பொன்னாவரை
பூத்துக் குலுங்கும்

அற்றைத் திங்கள்
அவ் வெண்ணிலவும்
இற்றைத் திங்கள்
இவ் வெண்ணிலவும்
சுற்றி சுற்றி
உன் முகம் காட்டும்