Wednesday, 7 March 2018

மார்கழி இது எனக்கு தவக்காலம்

மார்கழி
இது எனக்கு தவக்காலம்
உன் நினைவுகளால்
நிறையும் பொழுதுகள்
என் மார்கழி மகள்

மழையயை நேசிப்பாய்
மழையாடி மகிழ்வாய்
விளையாடும் உன் அழகு -என்
விழியோடு கனவாக

காலப் பெருவெளி

காலப் பெருவெளி
காற்று வெளியிடை உன் குரல்
கனவில் கேட்குதடி
நேற்று தெறித்த உன் முகம்
நிலவில் தோயுதடி

சொல்லிச் சென்ற கவிதையெல்லாம்
எனக்கு சூத்திரமானதடி
எல்லைகள் கடந்த காலப் பெருவெளி
நிந்தன் நினைவினில் காயுதடி

குளிரால் உலரும் விடி காலை

குளிரால் உலரும் விடி காலை
குளிரால் உலரும்
விடி காலை
உன் நினைவால் உருகும்
மனம் நாளும்

பனி படரும்
இந்தப் பொழுதில்
நனி கூரும்
உன் கனி முகம்
நுனிப் புல்லின்
பனித் துளி
உன் முகம் காட்டி
மகிழ் கூரும்

உன் கனவுச் சுமை

உன் கனவுச் சுமை
கார்த்திகை முழு நிலவு
என் வாசல் வரை வந்து
உன் நினைவை
என்னுள் நீளச் சொல்கிறது

கார்த்திகை விளக்கீடு
நம் வீதியெங்கும்
வென்ணிலவுக்கு முகம் காட்டும் நேரம்
நாம் நம் வீட்டுப் படிகளில்
உட்காந்து கதைகள்
பல பேசி களித்த நாட்கள்
என்
மடி கனக்கிறது
உன் கனவுச் சுமை தேடி

இன்பப் பெரு வெளி

இன்பப் பெரு வெளி
உன்னை நினைத்து
ஓராயிரம் கவி சொல்வேன்
என்னில் உதித்த
இன்பப் பெரு வெளி
நீ

உன் சொல்லில் தெறித்த
அன்பின் திவலைகள்
எப்போதும்
இன்பப் பெரு வெளியாய்

நினைவுச் சுழி

நினைவுச் சுழி
மேலைப் புலத்திடையே
அதிகாலைக் குளிரிடையே
சாலை வழியிடையே
நீள நடக்கிறேன் நான் -உன்
நினைவுச் சுழியிடையே

ஒவ்வொரு நாளும்
என் கைகள் பற்றி
அழைத்துச் செல்கிறாய்
அச்சமில்லா பொழுதுகளை
எனக்கு தருகிறாய்

உன் ஒற்றைச் சிரிப்பு

உன் ஒற்றைச் சிரிப்பு
உன்
ஒற்றைச் சிரிப்பில்
பொன்னாவரை
பூத்துக் குலுங்கும்

அற்றைத் திங்கள்
அவ் வெண்ணிலவும்
இற்றைத் திங்கள்
இவ் வெண்ணிலவும்
சுற்றி சுற்றி
உன் முகம் காட்டும்

ஓவியமாகி உயிராய் நின்றவள்

ஓவியமாகி உயிராய் நின்றவள்
தேவதையொன்று
தேரிலேறி
பூவாய் மலர்ந்து
பூமிக்கு வந்தது

கவியம் ஒன்று
மண்ணில் உதித்து
காலம் முழுவதும்
கவிதையானது
நீலம் படர்ந்த
வானமெங்கும்
ஓவியமாகி
உயிராய் நின்றது
ஆயிரம் யுகங்கள்
கடந்து சென்றாலும்
அவளின் நினைவால்
நீளும் உலகு

குளிர் எறிந்து பனி மூட

Image may contain: 1 person, standing and childகுளிர் எறிந்து
பனி மூட
முகம் சிதையும்
அதிகாலை
விழி
நீள முடியாமல்
வழியெங்கும்
இருள் கூடும்
ஒளியாக
உன் நினைவு
களி கூரும்
என்னோடு

பனி பூத்து கனத்து சிரித்து கிடக்கிறது இங்கு

பனி பூத்து
கனத்து சிரித்து
கிடக்கிறது இங்கு
உன் நினைவு
பூத்து கனத்து கிடக்கிறது
நெஞ்சோடு

Image may contain: 4 people, people smiling, people standing
வீதியெல்லாம்
வெண்ணிற ஆடை கட்டி
பூரித்து
போய் இருக்கிறாள்
பூமித் தாய்
நான்
பூரித்து போக
நீ இல்லை
என்னோடு

சில்லென்று பூக்கும் உன் சிரிப்பு

சில்லென்று பூக்கும்
உன் சிரிப்பு
Image may contain: 2 people, people smiling, flower, plant, nature and outdoor
எங்கெங்கு காணினும்
உன் நினைவு
சில்லென்று பூக்கும்
உன் சிரிப்பு
நில்லென்று சொல்லும்
உன் கனவு

மெல்லென்ற காற்றில்
சொல்லொன்றிலிருந்து
சுகம் காட்டும்
உன் கவிதை

என்னில் பூத்த பொன் மலரே

என்னில் பூத்த
பொன் மலரே


Image may contain: one or more people, people sleeping, baby and close-up
Image may contain: one or more people
Image may contain: one or more people, people sleeping and baby என்னில் பூத்த
பொன் மலரே
எண்ணம் எங்கும்
இனிக்க இனிக்க
நீ நிறைக்க

Image may contain: 1 person, baby
வண்ணம் காட்டி
மகிழ்வின் இருப்பை
நீ சொல்வாய்
வையம் முழுதும்
நீ நிறைவாய்

விழி மூட முடியாமல்

விழி மூட முடியாமல்
நான் தூங்க வழி தேட
காதோரம் நீ வந்து
கதை சொல்கிறாய்
கண்மூடி நான் தூங்க
என்னோடு நீ வந்து
இசையாகி மொழியாகி
நீ வாழ்கிறாய்
Image may contain: one or more people
Image may contain: 1 person, child and baby செல்லாத இடமெல்லாம்
நான் செல்லும் போதெல்லாம்
விழியாகி வழியாகி
நீ வாழ்கிறாய்

எனக்கு எல்லாமாய் இருந்தவள்

Image may contain: 1 person, smiling, standing, child and text
Image may contain: 1 person, night and child
எனக்கு
எல்லாமாய் இருந்தவள்
நீ....
சொல்லாமல் வந்த
சுனாமியில்
கரைந்த
அந்த நாளோடு
நான்
இல்லாமல் போனேன்

தேனென இனிப்பாய் நீ

தேனென இனிப்பாய் நீ
வான் மழை மகிழ்வாய் நீ
செந்தமிழ் அமுதாய் நீ
சேர்ந்திடும் அழகே நீ
Image may contain: 1 person, standing, shoes and child
Image may contain: one or more people, people standing, child and indoor
உன் அன்பிடை
Image may contain: 1 person, child and close-upதோயும் நான்
அழகினை பாடும் நான்
என்பிடை உயிரோடு
உணர்விலே
கலந்திடும்
சொல்லிட சொல்லிட
சுவைத்திடும்
'செல்லமாய் நீ

உன்னிலிருந்தே உயிர் பெறுகிறேன்




Image may contain: 1 person, smiling, standing, shoes and child


















Image may contain: one or more people, people standing, people walking, outdoor and nature
உன்னிலிருந்தே
உயிர் பெறுகிறேன்
ஒவ்வோர் நாளும்
Image may contain: 1 person உந்தன் சிரிப்பில்
மகிழ்ந்து களிக்கிறேன்
ஒவ்வோஈர் நாளும்

உந்தன் நினைவே
சந்தோசப் பொழுதாய்
ஒவ்வோர் நாளும்

செல்லம் என்ற சொல்லின் வல்லமை

Image may contain: 1 person, glasses, close-up and indoor
செல்லம்
என்ற சொல்லின்
வல்லமை
கல்லில் எழுத்தாய்
காலம் முழுவதும்
சொல்லிச் சென்றது
உன்
சுகந்த நினைவுகள்

Image may contain: 1 person
நினைக்க நினைக்க
நீ..
இனிக்கிறாய்
என்னுள்
Image may contain: 1 person, close-up
பனிக்க பனிக்க
கண்ணில்
வருகிறாய்
வா வா
என் தேவதையே

சின்ன மகள் சிரிக்கையில்

சின்ன மகள்
சிரிக்கையில்
சித்திரமும் பேச
நா துடிக்கும்
Image may contain: 2 people, people sitting and outdoor
வண்ணமகள்
புன்னகையில்
வானமும் சேர்ந்து
பூச் சொரியும்

சொல்லத் துடிக்கும் என் மனது

சொல்லத் துடிக்கும்
என் மனது
சோகம் தவிர்க்கும்
உன் நினைவு
Image may contain: 1 person
மெல்ல நீ வந்து
என் மேனி தொட்டு
சின்ன முத்தம் தந்து
சிரித்து சீண்டிச்
செல்கிறாய்....
கனவில்

பொங்கும் அழகுடையாகி

Image may contain: 2 people, outdoorபொங்கும் அழகுடையாகி
பொலியும் தமிழுடையாகி
எங்கும் அவளுடையாகி
எதிலும் அவளுடயாகி
இங்கும் அவளுடயாகி
தங்கும் அவள் எழில் கண்டேன்
தங்கப் பொழில் முகம் என்னில்
எங்கள் அழகுக் குயில் அவள்

நீ நடந்த பாதையெல்லாம்

நீ
நடந்த பாதையெல்லாம்
நெருஞ்சி முள்ளு
பூக்கலம்மா
தேன் சொரியும்
பொன்னாவரை
சிரித்து பூத்திருக்கு

Image may contain: 1 person
வான் மகள்
விழி திறந்து
மழைப் பூவை
சொரிந்திருக்க
நீ சென்ற வழியெல்லாம்
நெஞ்சோடு இனித்திருக்கு

வானம் பனிப்பூ சொரியும் அதிகாலை

வானம் பனிப்பூ
சொரியும் அதிகாலை
நீ என்னோடு
பேசும்
இனிய பொழுதும்
இதுதான்

Image may contain: 1 person, baby and close-up
நினைவு நெஞ்சில்
நீங்கா கனவுகளை
அணைத்து
சுகத்தை சோகம்
கலைத்து சொல்கிறத

அனாமிகாஞ்சலி நினைவுப் பேருரையும் கோபி ரமணணின் ஓவியக் கண்காட்சியும்

Image may contain: 1 person, smilingஅனாமிகாஞ்சலி நினைவுப் பேருரையும் கோபி ரமணணின்
ஓவியக் கண்காட்சியும்
===================
அனாமிகாஞ்சலி நினைவுப் பேருரை தொடரின் நான்காவது பேருரையும் ஓவியர் கோபி ரமணணின் ஓவியக் கண்காட்சியும் எதிர்வரும் 26-12-2017 செவ்வாய்க் கிழமை மாலை 3.00 மணிக்கு மட்/ பொது நூலக கேட்போர் கூடத்தில் முன்னாள் மட்/ மாநகர ஆணையாளர் திரு. சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மகுடம் ஆசிரியர் திரு. வி.மைக்கல் கொலின் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க காப்பாளர் கலாபூஷணம் செ. எதிர்மன்ன சிங்கம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
"ஈழத்துக் கூத்துப் பனுவல்களின் இலக்கியச் செழுமை" என்ற தலைப்பில்
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர் திரு. க. மோகனதாசன் பேருரை ஆற்ற
பேராசிரியர் செ. யோகராசா நூல் அறிமுகத்தையும் ஓவியங்கள் தொடர்பான அறிமுகத்தை சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினமும் ஆற்றவுள்ளனர்.
திரு.பால சந்திரகுமார் இசையஞ்சலி நடத்த செல்வி அம்ரிதா விஜயன் நன்றியுரை ஆற்றுவார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Comments
Rakuthas Shanmukanathan
Rakuthas Shanmukanathan தகவலுக்கு நன்றிகள்